இன்றய காலகட்டத்தில் நாம் ஒரு பொதுவான ரியாலிடியிலிருந்து பெர்சனலான ரியாலிட்டிக்கு நமக்கே தெரியாமல் மெல்ல மாறிக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் நம் உலகில் இயற்கை அதிகமாக இருந்தது. அன்று என் உலகில் இருந்ததெல்லாம் உங்கள் உலகிலும் 90% இருந்தது, அப்போது ஒன்றைப் பற்றிய நம் விலாவாரியான அறிவு குறைவு. இன்று மனித அறிவு அபார வளர்ச்சி அடைந்து விட்டது , மீடியாக்கள், இணையம் வழி ஏராளமான தகவல்களை மூளை புதிது புதிதாய் வேகமாக அறிகிறது.
செயற்கையான, விர்ச்சுவலான பல விஷயங்கள், ப்ரோட்டோகால்கள், நம்பிக்கைகள், கான்செப்டுகள்,தினம் உருவாக்கப்பட்டு, மனிதர்கள் இப்படி உலகை உணரவேண்டும், இப்படி வாழவேண்டும் என்றெல்லாம் யாரோ கல்வி, அறிவியல், அரசாங்கம் , சட்டங்கள், மூலம் தீர்மானித்து அதற்கேற்ற தகவல்கள் அறிவின் பல்வேறு திசைகளில் விரிந்து உலகை பற்றிய நம் பார்வையை அசுரத்தனமாய் மாற்றுகிறது.நம் ரியாலிடியில் முன்பு இருந்தவை பலதும் இன்று இல்லை..
அவரவர்க்கென்று ஒரு அறிவு தேடலின வாய்ப்பு இருக்கிறது.அதனால் உலகை பற்றிய நம் பார்வை தனிப்பட்ட ரீதியில் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதர்களுக்கிடையே இணைப்பில்லை. உங்களுக்கு பிடிததது எனக்கு பிடிப்பதில்லை, உங்கள் சரி எனக்கு தவறு, உங்களுக்கு முக்கியம் எனக்கு அனாவசியம், உங்கள் உலகில் கிரிக்கட் இருக்கிறது , என் உலகில் அது இல்லை, ஆடை, உணவு, அரசியல், மதம் என ஒருவர் உலகம் மற்றவருக்கு புரிந்து கொள்ள முடியாத, சகிக்க முடியாத முரண்பாடாய் இந்த வேறுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது,
கால உணர்வு கூட ஒவ்வொருவருக்கும் மாறுகிறது. சிலர் இன்னும் அந்த கால உலகில் கிராமத்தில் வாழ்கிறார்கள், அதே சமயம் மற்றொரு பக்கம் நவீன வாழ்கையின் உச்சத்தில் மற்றொரு வர்க்கம். ஆண்களுக்கு ஒரு உலகம் என்றால் பெண்களுக்கு ஆண்களால் புரிந்து கொள்ள சிரமமான மற்றொரு ரியாலிட்டி.. என்னைப்பற்றி நீங்கள் நினைப்பது வேறு என்னைபற்றி நான் உணர்வது வேறு
சாப்பிடும் போதும் டாய்லட் போகும் போது மட்டும் தான் பலரும் நிஜ உலகில் வருகிறார்கள் மற்றெல்லா நேரமும் தத்தமது மூளைக்குள் வாழ்கிறார்கள். மிக நெருங்கிய உறவுகள், நண்பர்கள் கூட பரஸ்பரம் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளாத புரிந்த கொள்ள முடியாத உலகில் சிறைபட்டுள்ளார்கள்,
அதே சமயம் இதற்கு நேரெதிராக புரிதலின் தளத்தில், உள் ஓளி பெற்றவர்கள் இன்னொரு ரியாலிடியில் இணைந்திருக்கிறார்கள், அங்கு அறிதல் இல்லை.உணர்தலே இருக்கிறது. இடம் கால தடையின்றி உணர்வுகளால் தொடர்பிலிருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்து கொள்பவர்கள், உதவுபவர்கள். அன்பு , கருணை நிறைந்தவர்கள், ஆணவமற்றவர்கள். எல்லாவற்றையும் ஒருங்கே புரிந்து கொண்டவர்கள்.
கருத்துகள்