கர்மா -வினையும் விளைவும்

 


கர்மா என்றால் வினைக்கு சமமான எதிர்விளைவு.. cause and effect... நியுட்டன் வதி போன்றது.. every action has equal and opposite reaction.. நாம் இப்போதைய நிலையில் உணரக்காரணம் நம் கர்மா..நல்ல கெட்ட எனபதெல்லாம் கர்மாவுக்கு இல்லை.. அது நாம் கருதுவது.. கடன் வாங்கினால் அதை கொடுக்க வேண்டும்.. நாம் எது செய்தாலும் நம்முடன் அது ஒட்டிக்கொள்ளும். அதன் விளைவை அனுபவிக்கும் வரை அதை சுமக்க வேண்டும்.. கர்மா நியூட்ரல் ஆகும் போது நாமே இருக்க மாட்டோம்.
கர்ம வினை அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் அதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை மாற்றலாம்...
தியானத்தை ஒருவர் நாடுவதற்கும் நல்ல குருவை அடைவதற்கும்ம் கர்மாவின் பங்கு இருக்கிறது..கர்ம வினைப்படி உங்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் . அதை வேறு பரிமாணத்தில் பார்த்து உணரும் ஒரு சக்தி உங்கள் ரியாடியை மாற்றி உங்களுக்கான அந்த சம்பவத்தை மாற்றி அமைக்க முடியும் .ஆனாலும் அதற்கேற்ப கர்மா வேறு வகையில் கணக்கை தீர்க்கும்..
மனமுருகி பிரார்தனை ,மன்னிப்பு வேண்டல் மூலமும்.கர்மாவை உணர்தல் மூலமும் கர்மாவை கழிக்க முடியும் என்றாலும் அதுவும் கர்ம விதிப்படியே தான் நடக்கும். நடந்து செல்ல வேண்டிய கர்ம பலனுக்கு காரில் செல்லலாம்.. என்றாலும் காருக்கான காசு சம்பாதிக்க எப்போதாவது அதே அளவு கஷ்டப்படிருக்க வேண்டும் .
கர்மா பல கிளைகளாக இருக்கிறது. உதாரணமா நீங்கள் பேங்கில் வாங்கும் கடன் ஒரு கர்மா என்றால் உங்கள் பெயரால் அரசு வாங்கும் கடன் எனும் கர்மத்தையும் நீங்களும் சுமக்கிறீர் .முதலாவதை நீங்களோ உங்கள் பிள்ளைகளோ செலுத்தி தீர்ககலாம். இரண்டாவதை நீங்களோ அல்லது உங்கள்
ஊரிலுளள்வர் நாட்டில் உள்ள செல்வந்தர் யாரும் தீர்கலாம்.
உங்கள் கர்மத்தை தீர்க்க குரு உதவுவது என்பது நாட்டு கடனை தீர்க்க பணக்காரர்கள் வரி உதவி செய்வது போ. அவர்கள் நம் வங்கி கடனை தீர்க்க மாட்டார்கள். தீர்த்தால் குருவிடம் கடன் பட்டு விடுவீர்கள்..
மேலும் உங்கள் குரு என்பதே மற்றொரு நிலையில் நிலையில்.. நீங்களாகவும் இருக்கிறீர்கள்.
கர்ம விளைவுகளில மோசமாக நாம் சிறைபட்டால் அதன் துன்பம் காரணமாக மனம் இறைவனிடம் வேண்டு.. அப்போது இறைவன் நாம் விழிப்பதரகான அருளை தருவான்.. விழிப்பில் செய்யும் நம் நல்ல கர்மங்களை முந்தய கரம பலனை ஈடு செய்து விடுதலை தரும்.. பசித்தால் குழந்தை அழும். அழுதால் தாய் பால் தருவாள்.
பால் அருந்தினால் பசி ஆறும்.

கருத்துகள்