உண்மையை பற்றிய உண்மை

உண்மைகளை யார் எவ்விதமாக உங்களுக்கு எடுத்து சொன்னாலும் அதை முதலில் உங்கள் நம்பிக்கைகள் தான் கையிலெடுத்து பரீசீலிக்கும். பின்னர் அது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருந்தால் எடுத்துக்கொள்ளும். உங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தால் எவ்வளவு பெரிய உண்மையானாலும் தூக்கி குப்பை கூடையில் போட்டு விடும்.
உங்கள் நம்பிக்கையில் அடிப்படை தவறிருந்தால் ஒரு போதும் உண்மையை அடையவே மாட்டீர்கள். கற்பனை சித்தாந்தங்களில் மாட்டிக்கொண்டு வெளிச்சத்தை இருளில் தேடிக்கொண்டிருப்பீர்கள்.
உண்மையை உண்மையாகவே உணர வேண்டும் என்றால் .உங்கள் நம்பிக்கைகளை சரிதானா? உங்கள் நம்பிக்கைகள் உள்ளிருந்து பெற்றதா? யாரோ உங்களிடம் திணித்ததா ? என கேள்வி கேளுங்கள். உங்கள் அறிவை கேள்வி கேளுங்கள். அது நீங்கள் அறிந்ததா? உங்களுக்கு கற்பிக்கப்பட்டதா என? உங்கள் புலன்களை ஆராயுங்கள் அது உங்களுக்கு உண்மையை சொல்கிறதா? என . உண்மையை தேடும் உங்களை கேள்வி கேளுங்கள் நீங்கள் யார் என? எல்லாம் உங்களுக்கு தெளிவாகி விட்டால் நீங்கள் உண்மையை மட்டுமே காண்பீர்கள். மற்ற அத்தனை கற்பிதங்களும் கலைந்து போய்விடும்..

 

கருத்துகள்