ஜோதிடம் விஞ்ஞானமா?



நம் நாட்டின் எந்த ஊடகமாக இருந்தாலும் சரி அதில் நிச்சயம் சினிமா அதை விட்டால் ஜோதிடம் தான் பெரும்பாலும் நிரம்பியிருக்கும். ஜோதிடத்தால் நன்மையோ இல்லையோ கெடுதல் நிச்சயம் என்று தெரிந்தும் பெரும்பாலான படித்த மக்கள் கூட நம்புகிறார்கள். காரணம் ஜோதிடத்தை பக்தியோடு பின்னியதால் அதன் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கும் துணிவு பலருக்கும் இல்லை. இரண்டாவது எதிர்காலத்தை அறியும் மனித விருப்பமும் காரணம். ஜோதிடத்தை பற்றிய ஒரு் பாமரனின் பேட்டி இது. படித்தவர்களுக்கு பயன்படும்.


ஜோதிடம் எப்போது தோன்றியது?
அது ஆச்சுங்க .ரொம்ப காலமா இஸ்டரியெல்லாம் உண்டாவறதுக்கு முந்தியே சோசியம் இருக்குங்க. பெரும்பாலான மக்களுக்கு சுயமாய் யோசிக்கிற பழக்கம் கிடையாதுண்ணு எப்போ கொஞ்ச பேருக்கு தெரிஞ்சு போச்சோ அப்பவே சோசியத்தை உண்டாக்கிட்டானுங்க.

ஜோதிடம் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளது?
பெரிய பெரிய மன்னருங்க அறிவாளிங்க கூட சோசியத்த நம்பியிருந்திருக்காங்க. ஏன் இப்ப கூட பெரியஅரசியல் வாதிகள் முதக்கொண்டு அன்னாடம் சோத்துக்கே வழியில்லாதவனும் சோசியத்த தானே நம்புறான் ? எலெக்சனில நிக்கிற பத்து பேரும் சோசியக்காரண்ட கேட்டுபுட்டு தான் டெப்பாசிட் கட்டுறான் . ஆனா ஒருத்தன் தான் செயிக்கிறான்.ஆனா சோசியக்காரன் மட்டும் எப்பவும் டெபாசிட் இழக்கிறதில்லை.

காலைல காப்பி குடிக்கிறதுக்கு முன்னே காலண்டரை பார்த்து அது பேதியாகுமா? வாந்தியாகுமான்னு? பலன் தெரிஞ்சுகிட்டுதான் குடிக்கிறான். எந்த பேப்பரை பிரிச்சாலும் எல்லா பக்கமும் சோசியமும் மூலையிலே துக்குனூண்டு செய்தியும் தான் இருக்குது. டிவியத் திறந்தா கடக ராசிக்காரர்களே இன்னைக்கு நீ காலி. தண்ணி லாரியிலே கண்டம் இருக்குண்ணு பீதிய கிளப்புராங்க.என்னென்னமோ கல் எல்லாம் விக்கிறாங்க வீடு கட்டுற செங்கல்ல விட சீப்பாத்தான் இருக்கு. பெரிசா கல் வச்ச மோதிரம் அரசியல் வாதிகளுக்கு நல்லதாம். எப்படியோ தலையில அம்மிக்கல்லை வச்சு மொளகாய் அரைக்காம இருந்ததா சரி.

ஒரு ரகசியம் சொல்றேன் .யாருகிட்டேயும் சொல்லாதீங்க.சோசியத்தை நம்பாதவனும் சோசியகாரனும் கொஞ்சூண்டுதான்.சோசியத்த கண்ண மூடி நம்புறவனும் அப்படி நம்புறவனை எப்படியெல்லாம் ஏமாத்தி காசு சம்பாதிகலாம்னு கணக்கு போடறவங்கதான் இந்த உலகத்தில மெஜாரிட்டி ஆளுங்க. ஆமா நீங்க எந்த கட்சி?

பல வகையான ஜோதிடம் இருக்கிறதே எது சரியானது?
ஒருத்தனை பத்தி இன்னொரு சோசியக்காரன் கிட்ட கேட்டா இவனது தான் சரி மற்றது பொய்யின்னுவான் மொத்தத்தில எல்லா சோசியக்காரங்க கிட்ட கேட்டு ஒரு முடிவுக்கு வந்தால் எல்லாம் பித்தலாட்டம்னு தெரியும்.

ஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானது என்கிறார்களே?
அக்காங். .அப்படித்தான் இருந்துச்சு பண்டைய விஞ்ஞானிகள் தூர தர்சினி வச்சு வானத்தையும் கிரகங்களையும் ஆராய்ஞ்சு பருவ காலங்களை கணிச்சாங்க. விவசாயிகள் கூட மேகத்தயும் காத்தையும் வச்சு மழை வருமாண்னு யூகிச்சாங்க. வால் நட்சத்திர வரவு, கிரகணங்கள் எல்லாத்தையும் கணிச்சதுக்கு பேர் அறிவியல். அது தான் இன்னிக்கு வானதுக்குள்ளேயே போய் தேடும் வான சாஸ்திர இயலா வாளர்ந்து நிக்குது. விஞ்ஞானங்கிறதை கரெக்டா கட்டம் கட்டிப்புடலாம். எப்ப வேணாலும் யாரும் அதை நிரூபிச்சு இது இது இப்படிதான் ரிசல்ட் வருமின்னு துல்லியமா சொல்லிப்புடலாம்.
எப்போ சோசியக்காரங்க தூர தர்சினியை தூக்கி தூரப் போட்டு பூதக்கண்ணாடியை கையில் எடுத்து பிரிய தர்சினி பிரியமா இருப்பாளா? என சொல்லத்தொடங்கினானோ அப்பவே எல்லாரையும் ஏமாத்தத் துணிஞ்சிட்டான். ஆனா அதை ஒரு அறிவியல் மாதிரி பெயின்ட் அடிச்சு வச்சிருக்காய்ங்க. இந்த சோசியருங்க ஜாதகக்கட்டை தூக்கிட்டு போய் அகில உலக அறிவியல் மாநாடுகளில் போய் பிரிச்சு வைக்க வேண்டியது தானே. கட்டங்களை பிரிச்சு மேஞ்சு தீவிரவாதிங்க எங்கெல்லாம் பதுங்கி இருக்காங்க எங்கே எப்ப தாக்குவாங்கன்னு கண்டு பிடிச்சு கொடுத்தா எவ்வளவு உசுருகளைக் காப்பாத்தலாம்.
சுனாமி வந்த போதும் நிலநடுக்கம் வருவதையும் சொல்லாதேன்னு எந்த கிரகம் வந்து வாயைப் பொத்திச்சு. ஏதோ நாலு பேர் படிக்கிற துக்கடா சோசியப்புத்தகத்தில பத்து எழுதி ஒன்னுநடந்திச்சுன்னா ஆஹா ஒஹோ நா அப்பவே சொன்னேனில்லையா என சவுண்ட் விடுவார்கள். சொன்னது நடக்கமால் போனால் எவன் அந்த கேள்விய எடுத்துகிட்டு போறது. அப்படியே போனாலும் ஜோசியம் பிழைச்சதுக்கு ஆயிரம் காரணங்கள் வச்சிருப்பாங்க.

யாராவது ஒரு சோசியன் தன்னால் நிச்சயமாக எதிர்காலத்தை 100% சரியாக கணிக்க முடியுமின்னு நெனச்சா கீழே உள்ள முகவரியை தொடர்பு கொண்டு
10,00,000 US டாலர்கள் பரிசு பெறலாம் என ஓப்பனா கேட்டுகிட்டிருக்காங்க. முகவரி இதோ http:/www.randi.org. emai:jref@randi.org.
இன்னிய தேதிக்கு அந்த பணத்தை டச் பண்ண ஒலகத்தில ஒரு சோசியக்கரனுக்கும் தில் இல்லே.


தொடர்ந்து படிக்க
ஜோதிடம் ஆன்மீகமா? 

 

ஜோதிடம்: மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

 

கருத்துகள்

நாளும் நலமே விளையட்டும் இவ்வாறு கூறியுள்ளார்…
ennanga ithu vilayaattu?
aassai aasaiyaa vanthen kaththukalaamnu.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
அவசரப்படாதீங்க கண்டிப்பா கத்துக்கலாம்.நாளும் தொடர்ந்து படிங்க நலம் விளையும்
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. கலக்கீட்டிங்க..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யோ அய்யோ