பஞ்ச பூதங்கள்-ஒரு பூதக்கண்ணாடி பார்வை


பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுவது நீர், நிலம், நெருப்பு, காற்று , ஆகாயம்.

பஞ்ச பூதங்களால் ஆனதாக கூறப்படும் இந்த உலகம் முழுவதுமே பல பொருட்களால் ஆனது. பொருட்கள் பல சேர்மங்களாலும் சேர்மங்கள் எல்லாம் தனிமங்களாலும் ஆனது. இத்தகைய அடிப்படை தனிமங்கள் 106 என வகைப்படுத்தியும் வைத்திருக்கிறோம். இதில் நீர், நிலம், காற்று மூன்றுமே இந்த அடிப்படைத் தனிமங்கள் பல மூலக்கூறுகளாக சேர்ந்து உருவாகியது தான்.

நிலம் ஒரு திடப்பொருள், நீர் ஒரு திரவப்பொருள். காற்று ஒரு வாயுபொருள். நெருப்பு எனப்படுவது ஒரு வேதி மாற்ற விளைவு.

நெருப்பு என்பது வேறு வெப்பம் எனப்படுவது வேறு, சமையல் செய்யும்போது உருவாகும் நெருப்பு என்பது ஒரு எரிபொருளில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை குறிப்பிட்ட அளவு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகள் சிதைந்து அதிலுள்ள கார்பன் அணுக்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்ஸைடாக மாறுகிறது . இந்த வேதி மாற்றத்தில் உபரி சக்தி வெப்ப சக்தியாக வெளியிடப்படுகிறது. இது அணுக்களை இடம் பெயர்ப்பதால் எஞ்சும் சக்தி . இது சாதரண நெருப்பு. மைக்ரோ வேவ் அவனில் மின்சார சக்தி மைக்ரோ வேவ் அலைகளாக மாற்றப்பட்டு அந்த அலைகள் உணவுப் பொருள்களில் உள்ள நீர் மூலக்கூறுகளை அசைப்பதால் உணடாகும் உராய்வு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இங்கே நெருப்பு உருவாகவில்லை. அணுகுண்டு வெடிக்கும் போதும் அணு உலைகளிலும் கதிரியக்க அணுக்களை பிளப்பதால் பெரும் சக்தி வெளியாகிறது. இங்கும் வெப்பம் இருக்கிறது. நெருப்பு இல்லை. சூரியன் எரியும் போது ஹைடரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுகிறது. இதனால் பெரும் வெப்பம் வெளியாகிறது. அதும் நெருப்பல்ல.

நிலம் என்ற திடப்பொருளை சூடாக்குந்தோறும் அதில் உள்ள ஒவ்வொரு தனிமங்களும் வெவ்வெறு வெப்ப நிலைகளில் உருகி திரவ நிலை அடையும். அதாவ்து நீராகும். அப்படி 0*C க்கு மேல் 100* C குள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இணந்த மூலக்கூறுகள் நீராக இருக்கிறது. பூமியில் நிலவும் வெப்பம் 0*C க்கு கீழே இருக்குமானால் பூமி முழுவதும் ஒரே போல் திடமாகவே இருக்கும்.

இனி இந்த திரவப்பொருளை உதாரனமாக நீரை சூடாக்கினால் அது வாயுவாக மாறிவிடும். சாதரண பூமி வெப்பத்தில் எந்த மூலக்கூறுகள் எல்லாம் வாயு நிலைக்கு தள்ளப்படுமோ அது தான் காற்று. காற்றை அதிக அளவு குளிர்வித்தால் அது திரவமாகி விடும். மேலும் குளிர்வித்தால் அது திடமாகிவிடும். ஒரே பொருள் அது வெப்பத்தை ஏற்று திட நிலையிலிருந்து திரவமாகும் மேலும் வெப்பமூட்ட வாயு வாகும் . வாயுவை மேலும் வெப்பமூட்டினால் அது ஒளி அலைகளாகவும் வெப்ப அலைகளாகவும் மாறி பிரபஞ்சம் முழுதும் பரவுகிறது. வெப்ப இழப்பிற்கேற்ப வாயு , திரவ நிலக்கு வந்து பின் திட நிலைக்கு வருகிறது.

இரு ஹைட்ரஜன் அணு ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் சேர்ந்து ஒரு நீர் மூலக்கூறு உருவாகிறது, இது பூமியின் சாதரண வெப்ப நிலையில் திரவநிலையில் இருக்கிறது- இது தான் -நீர்.

ஒரு பொருளில் உள்ள கார்பன் அணுக்கள் குறிப்பிட்ட வெப்பத்தில் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களோடு சேர்ந்து கட்சி மாறும் நிகழ்ச்சி தான் நெருப்பு.

பூமியில் நிலவும் சாதாரண வெப்பத்தில் திட நிலையிலே இருக்கும் மற்ற தனிமங்கள் எல்லாம் கலந்த அமைப்பு தான் நிலம்.

சாதாரண வெப்பத்தில் வாயு ரூபத்தில் உள்ள சில தனிமங்களும் சேர்மங்களும் சேர்ந்து -காற்று

சூரிய ஒளி காற்று மண்டலத்தை கடக்கும் போது நீல வண்ண அலைகள் மட்டும் அதிகம் ஊடுருவுவதால் காற்று மண்டலத்தில் தோன்றும் நீல வண்ணத்தை தான் ஆகாயம் என்று சொல்கிறொம்.

அடிப்படையில் இவை எல்லாம் ஒரே பொருளின் பல் வேறு நிலைகள்.

கன்யாகுமரியிலிருந்து காஸ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை வழி ஒரு பாத யாத்திரை செய்வோம். நாம் நடக்கும் பாதை ஒன்று தான் அதன் பெயர் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் வழியில் எத்தனை ஊர்கள், மாவட்டங்கள், மானிலங்களை கடந்து செல்வோம். இதெல்லாம் உண்மையில் என்ன. நாம் வெவ்வேறு தூரங்களை புரிந்த்து கொள்ளும் பொருட்டு நாமாக வைத்துக்கொண்ட வெறும் பெயர்கள்.


தென்னிந்தியவின் நான்கு மானிலத்தையும் வைத்து, தென்னிந்தியா நான்கு பூதங்களால் ஆனது என்று சொல்லலாமா?

கருத்துகள்

அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
பஞ்சபூதங்களின் அலசல் ரொம்ப அருமையா எழிமையா கொடுத்திருக்கீங்க சாதிக்
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//தென்னிந்தியவின் நான்கு மானிலத்தையும் வைத்து, தென்னிந்தியா நான்கு பூதங்களால் ஆனது என்று சொல்லலாமா?//

சரியான முடிவுரை
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
தீ/வெப்பம் அழகான விளக்கவுரை
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு