கணினி எனக்கொரு போதிமரம்

ஒரு கணினி எப்படி வேலை செய்கிறது? என்று உற்று கவனித்தால் சிருஷ்டியின் பல அற்புதங்களை உணர முடியும்.

பிரபஞ்சத்தில் தொடர்ச்சியான மாற்றம் ஒன்றே தனித்த மாறாத விஷயம். மற்றவை எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தது தான். மாற்றம் முடிவிலாப் பரிமாணங்களில் ஏற்படுகிறது. ஒவ்வொரு பரிமாணத்திலும் நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாற்றம் ஒரு சுழலாகவோ, அலையாகவோ, ஒரு கயிற்றின் பிரிகள் போலவோ, ஏற்படுகிறது. இதில் ஒரு பரிமாணம் தான் மனித மனம். இது போன்ற வேறு பரிமாணங்களின் அலைகள் மனதின் அலையுடன் வெட்டிக்கொள்ளும் போது மனம் மாயப்பிரபஞ்சத்தை உணர்கிறது . இது நிஜப் பிரபஞ்சதின் மிக மிக சொற்பமான விளைவு. உண்மைப் பொருள் நம்மால் உணர முடியாத் தன்மை உடையது.

ஒரு போஸ்ட்மேன் தினசரி எத்தனையோ வீடுகளுக்கு கடிதம் கொண்டு கொடுக்கிறான். அது அவன் வேலை. அவன் உலகம். அனால் இன்று உங்களுக்கு அவன் கொண்டு தந்த அப்பாயின்ட் மென்ற் ஆர்டர் உங்கள் வாழ்க்கையே மாற்றி விடுமளவு முக்கியமானது. போஸ்ட் மேன் கையில் இருக்கும் கடிதங்கள் போல எத்தனையோ பிரபஞ்ச இயக்கங்கள் இருக்கின்றன. அதன் ஒரு கடிதம் உங்களால் மிக முக்கியமாக உணரப்படுவதை போல உங்கள் மனம் உணரும் உலகம் இருக்கிறது. உங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர். ஆனால் போஸ்ட்மேனுக்கு சாதாரண கடிதம். இரண்டும் ஒன்றல்ல.

மேலே சொன்ன அலை வடிவ மாற்றங்கள் தான் ஒரு கணினியின் ஹார்ட் டிஸ்க்கிலும் இருக்கிறது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பாட்டும் படமும் இணையமும் எதுவும் அதற்கு தெரியாது. ஹார்ட் டிஸ்க் சுழலும் போது வெறும் அலைகளைத்தான் ப்ராசசர் வாசிக்கிறது. அந்த அலைகளில் பல pattern இருக்கிறது. வாசிக்கப்படும் அலைகளின் patternகள் ஃபைல்களாக கருதப்படுகிறது. kernal என்ற ஃபைல் (மனிதனின் ஜீனுக்கு ஒப்பிடலாம் ) லோட் ஆகிறது. அது ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தை மெமரியில் லோட் செய்கிறது். ஆப்பரேட்டிங் சிஸ்டம் , மெமொரி, ப்ராசசர் எல்லம் சேர்ந்து ஒரு மூளைக்கு ஒப்பிடலாம். ரெஜிஸ்ட்ரி என்ற மனதை விர்ச்சுவலாக உருவாக்குகிறது. இந்த ரெஜிஸ்ட்ரி தான் எந்த ஃபைல்களை பாடலாக ஒலிக்க வேண்டும் எந்த ஃபைலை படமாக காட்ட வேண்டும், இணையம் வழி வரும் அலைகளை இணைய பக்கங்களாகக் காட்டுவது. தொலை பேசுவது எல்லாம்.

மனிதனுக்கு ஐந்து "ஃபைல் அசோசியேசன்" தான் ஐம்புலன்கள். வெளியுலகிலிருந்து புலன்கள் பெறும் எந்தத் தூண்டுதல்களை எப்படி நம்மை உணரச் செய்யவேண்டும் என்ற புரொகிராம் ஜீன்கள் வழி பிறப்பிலிருந்தே நாம் பெறுகிறோம் நாம் வளர வளர அது தான் மனமாக மாறுகிறது.

கணினிக்கு எத்தனையோ புலன்கள். விழி மற்றும் செவியுணரும் தூண்டல்களை கணினியில் உருவாக்குவது போல் ஏனைய புலன்களையும் ஏமாற்றும் கணினி நுட்பம் நாளை வளரலாம். ஸ்க்ரீனில் காணும் ஐஸ்க்ரீமை வெனிலாவின் மணத்தோடு ஜில்லென்று சுவைத்துப் பார்க்கலாம். நடிகையின் இடுப்பைக் கிள்ளிப் பார்க்கலாம். விளம்பரங்கள் "அய்யா வாங்க அம்மா வாங்க" என்று கையைப் பிடித்து இழுக்கலாம். பலான சைட்டுக்கு போனால் பாப் அப் போல இணைய போலீஸ் முகத்தில் கும்மென்று குத்து விடலாம்.

சரி இனி இடம் என்ற கருத்தை கணினியை கொண்டு உணரவைக்க முடியுமா? வென பார்க்கிறேன்.

உங்கள் கணினியின் டெஸ்க் டாப்பில் Universe என்றொரு Folder உருவாக்கவும். அதனுள் Solar system/Earth/India/ your name என ஒன்றுக்குள் ஒன்று இருக்கும் படி பல Folderகளை உருவாக்கவும்.
உங்கள் கணினியின் C:\Documents and Settings\User என்ற முகவரியில் Desktop என்றொரு ஃபோல்டர் இருக்கும் அதன் ஷார்ட் கட் ஒன்றை மேலே உருவாக்கிய your name Folderக்குள் போடவும்.

இப்ப நீங்க யாரு?- "your name" . எங்க இருக்கீங்க ?-"India"வுக்குள்ளே ."India" எங்கே இருக்கு? -"Earth"திலே. அப்படி பின்னோக்கி கிளிக் பண்ணி Desktop வந்ததும் இதுக்கு மேலே இடம் இல்லை இது தான் பிரபஞ்சத்தின் எல்லைன்னு விஞ்ஞானியப்போல் மலைச்சு நிக்கிறீங்க . அப்புறம் ஆன்மிகமும் விஞ்ஞனமும் ஒண்ணாயிடறது. ஆன்மீக வாதிகள் DOS மோடில் C:\Documents and Settings\User\desktop\Univers\solar system\Earth \India\your name என்ற முகவரியை தெரிந்து கொண்டு எதற்கு இத்தனை ஃபோல்டர்கள் எல்லாம் வெறும் பைனரி தானே. Your Nameம் பைனரி தான் Universம் பைனரி தான் Desk top ம் அதே தான் எனவே "நானே கடவுள் "என அகம் பிரம்மாஸ்மி யாகி விடுவார்கள்.

விஞ்ஞானிகள் window மோடில் எப்படியாவது my computer Icon ஐ கண்டு பிடித்து அதற்கு worm hole கருந்துளை என்றோ பெயரிட்டு சூட்சும் பயணம் செய்து explorer view ல் எந்த Folderக்கும் டைரக்டாக போகலாம் . அல்லது C:\Documents and Settings\User\desktop\Universe\solar system\Earth \India\your name என்று போய் சுத்தி சுத்தி வரலாம்.

சாதரண ஜனங்கள் desktop\Univers\solar system\Earth \India\your name என்று கிளிக்கிக் கொண்டு Your Nameல் உள்ள desktop Short cut வழி மீண்டும் Univers\solar system\Earth \India\your name என்று "கிளிக்" கி்க்கொண்டிருப்பர்கள். சரியான தனது முகவரி தெரியும் வரை இப்படி "கிளிக்"குவதை தான் "பிறவிப் பெருங்கடல்" நீந்துவதாக வள்ளுவர் சொன்னாரோ? Desk top shortcut ஐ கிளிக் செய்யும் போது Folderக்குள் தெரியும் Icon களை பார்ப்பது போலத் தான் அண்டத்தில் உள்ள சுழற்சியை அணுவிலும் காண்பதை "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது" என்றார்கள்.

இங்கே இருப்பது பைனரி(Binary) ஒன்றே உண்மை. அதை மனம் folder view ல் பார்ப்பது மாயை. ஒன்றுக்குள் ஒன்று எத்தனை Folder இருந்தாலும் கிளிக் செய்யும் போது எல்லாம் ஒரே folder தான் வேறு வேறு முகவரிகளில் தெரிவது. எனவே இடம் என்பதும் இந்த Folder களைப் போல் ஒரு எல்லை கோடுடைய கற்பனை தான். சூட்சும நிலையில் எல்லாம் பைனரி என்பதை போல எல்லா பொருட்களும் ஒன்று தான்.

காலம் , இடம் , இயக்கம் , பயணம் , பொருள் , சக்தி இது போல் நாம் உணரும் எல்லாமே ஒன்றுக்கொன்று சார்பானது. ஒன்று இன்னொன்றை பாதிக்கும். explorer லும் , start menuவிலும், adress bar வழியும், DOS மோடிலும்,search செய்தும் அடைவதைப் போல இருப்பதை பலவாறாக உணருகிறோம்.

பருப் பொருள் போக முடியாத இடத்தை சூட்சும பொருளான அலைகள் எளிதில் அடைவதைப் போல explorer view ல் எந்த இடத்தையும் எளிதில் சூட்சும நிலையில் அல்லது வேறு பரிமாணங்களில் அடைய முடியும். அப்படிப்பட்ட வேறு பரிமாணங்களை(Dimension) உணர மேலும் நுட்பப் புலன்கள் தேவை. அப்படி ஆறாவது ஏழாவது புலனுணர்வை பெறவும் முடியும். ஏன் என்றால் நம்மிடம் இருக்கும் ஐந்து புலன்களும் அப்படி உருவானது தான் . எல்லாம் ஒரு புலனில் இருந்து பரிணாம (Evolution)வளர்ச்சி பெற்றது தான். மேலதிக புலனுணர்வு வேண்டுமானால் அதற்கு கடுமையான தேவை ஏற்பட வேண்டும். அப்போது தான் உடல் அந்த திறனை பெறுவதில் முனைப்பு காட்டும். இதற்குத்தான் யோகிகள் உடல் வருத்தி கடுமையாகத் தவம் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஹீராக் குகையிலும், புத்தர் போதி மரத்தடியிலும் பண்டைய சித்தர்கள் பலர் காட்டிலும் பெற்றது இந்த அதிகப்படியான புலனுணர்வைத் தான். அதனால் அவர்களின் உலகம் மாறியது. சாதாரண மனிதன் உணர முடியாததை உணர்ந்தார்கள். இறைவனை தீவிரமாக தேடுபவர்களுக்கும், தீவிரமான நாத்திகர்களுக்கும் கிடைக்கும். தீவிரமாக எதையும் முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் தேடுவது எதுவானாலும் கிடைக்கும். ஆனால் அவர்கள் பிரபஞ்ச உண்மையை தெளிவாக புரிந்து கொண்டாலும் அதை ஐந்து புலன்களின் மாயையில் சிக்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு சொல்லுவது சிரமம். கதைகள் உதாரணங்கள் மூலமாகத்தான் சொல்ல முடியும். அதை தவறாக புரிந்து கொள்ளும் அரைகுறை மதவாதிகள் இருக்கிற senseஐயும் இழந்து nonsense ஆக நடமாடுவதே நிதர்சனம்.

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
\\குழப்பமாக இருக்கிறதா? ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்றய தினம் உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்சிகளை ரீவைண்ட் பண்ணிப் பாருங்கள். எத்தனை பேர் உங்கள் நிகழ்ச்சி்யை பாதித்திருக்கிறார்கள். அது போல் நீங்கள் பிறரை பாதிதிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட குறுக்கீடுகள் தான் சம்பவமாக உணரப்படுகிறது. ஒரே சம்பவத்தை நீங்கள் உணர்வதும் பிறர்உணர்வது வேறு.\\

நிறைய இருக்கு ...
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா! எனக்கு புரிந்துவிட்டது

ஓட்டுபெட்டி எங்கே!

ஒரு வித்தியசமான அனுகுமுறை ...
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
//இங்கே இருப்பது பைனரி(Binary) ஒன்றே உண்மை. அதை மனம் folder view ல் பார்ப்பது மாயை. ஒன்றுக்குள் ஒன்று எத்தனை Folder இருந்தாலும் கிளிக் செய்யும் போது எல்லாம் ஒரே folder தான் வேறு வேறு முகவரிகளில் தெரிவது. எனவே இடம் என்பதும் இந்த Folder களைப் போல் ஒரு எல்லை கோடுடைய கற்பனை தான். சூட்சும நிலையில் எல்லாம் பைனரி என்பதை போல எல்லா பொருட்களும் ஒன்று தான்//.

உண்மைதான். சுருக்கமாக வழிகள் பல ஆனாலும் போய் சேரும் இடம் ஒன்றே. கரெக்டா?
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
//தீவிரமாக எதையும் முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் தேடுவது எதுவானாலும் கிடைக்கும். ஆனால் அவர்கள் பிரபஞ்ச உண்மையை தெளிவாக புரிந்து கொண்டாலும் அதை ஐந்து புலன்களின் மாயையில் சிக்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு சொல்லுவது சிரமம்//
புலனடக்கம் உயர்வை கொடுக்கும் .கண்டிப்பாக
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் எழுத்துக்கள் standard ஆக உள்ளது. வாழ்த்துக்கள்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஜமால் பதிவில் இருந்த குறையை சுட்டிக் காட்டியதற்கு திருத்திக் கொண்டேன்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராஜேஸ்வரி
//உண்மைதான். சுருக்கமாக வழிகள் பல ஆனாலும் போய் சேரும் இடம் ஒன்றே. கரெக்டா?//

வழிகளும்,போகும் பயணமும் சேரும் இடமும் மனதின் மயக்கமே.என்று தான் சொல்ல வந்தேன்.புரியும் படி எழுத வில்லையோ? கடினமான பதிவு குழப்பும் சப்ஜெக்ட் தான் முடிந்தால் மீண்டும் ஒரு முறை படித்து சொல்லுங்கள்.உங்கள் பின்னூட்டம் எப்போதும் என் பதிவுக்கு கண்ணாடி.
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப அருமையான விளக்கம் சாதிக்
கணிணியையும் பிரபஞ்சவாழ்க்கையையும் நன்றாக கோர்த்து விளக்கமாக கொடுத்திருக்கீங்க‌
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு சின்ன request உங்க ஃபாண்ட் கலர் (Black & White) மாத்தலாமே, படிப்பதற்கு கடினமாக உள்ளது,

உங்கள் எழுத்தில் concentration பண்ணமுடியலே
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
டெம்ப்லேட் மாத்தி முயற்சி பண்ணுங்க‌
Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
நாம் புரிந்து கொண்டதை அடுத்தவருக்கு புரியவைப்பது ஒரு திறமை அதை அழகாக செய்திருக்கிறிர்கள் இலகுவான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி.