தண்ணீர் மரு(க)த்துவம்

நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான் என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு குறையும் போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் பறந்து விடுமாம்.
நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்ல 82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.

தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய தேவையான தண்ணீர் அருந்தி வருவது தான் குணமடையும் வழி

தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு காரணம். pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர் அதிகம் அருந்தினால் மூட்டு வலி குணமாகும்

தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத் தொகுதியில் உடலின் எடையைத் தாங்குவதில் தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி ஏற்படுகிறது.சரியான அளவு தண்ணீர் அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்

தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம் மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறையே angina எனும் நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர் அருந்துவது. இன்நோயைக் குணமாக்குகிறது.

தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது: மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி உண்டாகிறது

தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில் தண்ணீர் வரண்டு போகும்போது செரிக்கப்பட்ட உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது. அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன் தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல் புற்று போன்றவை.போதுமான தண்ணீர் அருந்துவது மட்டுமே இதனை குணமாக்கும்

தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம். உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல் காற்றுப் பாதைகளில் உடல் தடை ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன் எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி கிடைக்கச்செய்யும்

தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்

நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:
---------------------------------------------------------------------------------------------
தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை
  1. காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
  2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
  3. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
  4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
  5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் நலம்பெறுவது உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் அல்லது தணியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
  2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
  3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
  4. மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
  5. புற்றுநோய் - 180 நாட்கள்
  6. காச நோய் - 90 நாட்கள்.
  7. ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ?

கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

மேலும் விபரங்களுக்கு:
www.shirleys-wellness-cafe.com
www.watercure.com/wondersofwater


முக்கிய தகவல்: தாகம் அறிந்து போதுமான தண்ணீர் அருந்துவது சிறந்தது என்றாலும் அளவுக்கு அதிகமான தண்ணீர் அருந்துவதும் உயிருக்கு ஆபத்தாக முடியும் இது பற்றி மேலும் அறிய

 http://www.scientificamerican.com/article.cfm?id=strange-but-true-drinking-too-much-water-can-kill

 http://en.wikipedia.org/wiki/Water_intoxication

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
குடிநீர் பாத்திரத்தில் தண்ணீரில் தினமும் கொஞ்சம் புதினா இலைகளை நசுக்கிப் போட்டு வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஸ்லைசுகளும் போட்டு வைத்து குடிக்கலாம்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ஜில் தண்ணீரை விட, சுடு தண்ணீரை அதிகமா குடிங்க...

சுடு தண்ணீரின் நன்மைகள்...
* உடலை சுத்தப்படுத்தும் செரிமானம் நன்றாக நடைபெறும். உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.
மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.
* சுடு தண்ணீரை குடித்தால்,மலச்சிக்கல் பிரச்சனை நீங்கிவிடும். சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.
* உடல் எடை குறைய ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து,பசியைக் கட்டுப்படுத்தும்.
* இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, சளி எளிதில் வெளியேறிவிடும்.
* சூடான தண்ணீர் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.
* உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.
‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.

சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.

எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.

பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு.

அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.